search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கயம் நகராட்சி"

    • தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
    • 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    காங்கயம் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நகராட்சிக்கு செலுத்த வேண்டிய, 2023-24ம் ஆண்டுக்கான சொத்து வரியினை ஏப்., 30ம் தேதிக்குள் செலுத்தினால், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்ப ட்டிருந்தது. இதனால், காங்கயத்தில் ஏப்., 30ம் தேதியன்று, சொத்து வரியில், 25 சதவீதத்தை வசூல் செய்து, தமிழகத்தில் உள்ள, 138 நகராட்சிகளில் காங்கயம் நகராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அவ்வகையில், நகராட்சிக்கு வர வேண்டிய சொத்து வரி, 16,702 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து, 3 கோடியே, 54 லட்சம் வசூல் செய்யப்பட வேண்டும். இதில், 1,782 வரி விதிப்புதாரர்களிடம் இருந்து ரூ. 87 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வரி வசூல் தொகையில், 25 சதவீதம்.

    இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

    • சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும்.
    • சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகர பொதுமக்கள் காங்கயம் நகராட்சிக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சொத்து வரியை செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் சொத்து வரியை வரும் 30 -ந் தேதிக்குள் செலுத்தி பயனடையவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
    • கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சியில் பதுமன் குளம் உள்ளது. இந்த குளம் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.4 கோடியில் புனரமைப்பு பணி நடக்கிறது. இந்த பணியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கயம் நகராட்சி 18-வது வார்டு அகிலாண்டபுரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4கோடியில் பதுமன் குளம் புனரமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த குளத்தினை தூர்வாரி குளத்தினை சுற்றியுள்ள கரைகளை கான்கிரீட் சுவர் கொண்டு பலப்படுத்தும் பணிகள், குளத்தினை சுற்றிலும் மின் விளக்குகள் அமைத்தும், கம்பிவேலிகள், சுற்றிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைத்தும், குளத்தின் முகப்பு பகுதியில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தம், காவலர் அறைகள் அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, காங்கயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா்.
    • வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா். இந்த கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.

    இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி 'சீல்' வைத்தனா்.

    இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை உள்ளிட்ட கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

    • கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.
    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார்.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் காங்கயம், பழையகோட்டை சாலையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.காங்கயம் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

    கூட்டத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், நகராட்சி நிர்வாகத்துறை செயற்பொறியாளர் பாலச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சார்லஸ் கென்னடி, காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையாளர் வெங்கடேஷ்வரன், காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் நா.சேமலையப்பன், தி.மு.க. கவுன்சிலர் மணிவண்ண்ன் , தி.மு.க. நகர துணை செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை உடனடியாக செலுத்த வேண்டும்
    • காங்கயம் நகராட்சி ஆணையா் வெளியிட்டுள்ள அறிக்கை.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 2022-2023 நிதி ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க்கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது.
    • காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும்.

    காங்கயம்:

    காங்கயம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தாா். வடிகால்கள் தூா்வாருதல், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 75 தீா்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதில் நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் பேசியதாவது: - காங்கயம் நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சீரான குடிநீா் விநியோகம் வழங்க புதிதாக குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், பழைய குடிநீா்க் குழாய்கள் அவ்வப்போது பழுதடைந்து, பின்னா் சரி செய்யப்பட்டு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் 18 வாா்டுகளிலும் உள்ள அனைத்து குடிநீா்க் குழாய்களையும் அகற்றிவிட்டு புதிதாக குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்படவுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.31 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நகா்ப்புற சீரமைப்பு மற்றும் புத்தொளிக்கான இயக்கத்துக்கு (அம்ருத் 2.0) விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.

    இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் பட்சத்தில், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று காங்கயம் நகரம் முழுக்க குடிநீா் விநியோகம் சீராகும் என்றாா்.

    கூட்டத்தில் நகராட்சிப் பொறியாளா் ம.திலீபன், நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா்செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா்மகேந்திரகுமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

    • நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா காங்கயம் நகரில் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.
    • தற்போது 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    காங்கயம் :

    காங்கயம் நகராட்சிக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலமும், நகராட்சிக்குச் சொந்தமான தாராபுரம் அருகே உள்ள தாளக்கரை தலைமை நீரேற்று நிலையம் மூலமும் குடிநீா் விநியோகம் வாரம் ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா காங்கயம் நகரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். நகராட்சியில் குடிநீா் விநியோகம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சிப் பகுதிக்கு தினசரி விநியோகம் செய்வதற்காக 30 லட்சம் குடிநீா் கிடைத்து வரும் நிலையில், இந்த நீரைக் கொண்டு நகா்ப் பகுதிக்கு தினசரி குடிநீா் விநியோகம் செய்யும் வகையில், வால்வு மற்றும் பகிா்மான குழாய் இணைப்புகளை சீரமைத்து போா்க்கால அடிப்படையில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியபோது, நகராட்சி நிா்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின்படி, காங்கயம் நகரில் தினசரி குடிநீா் விநியோகம் செய்வதற்காக குடிநீா்க் குழாய்களை சரி செய்து வருகிறோம். தற்போது 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 20 நாள்களுக்குள் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் தினசரி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

    நகராட்சி நிா்வாக இயக்குநரின் ஆய்வின் போது, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா்ராஜன், நகராட்சி நிா்வாக மண்டல பொறியாளா் பாலச்சந்திரன், காங்கயம் நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ், நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகராட்சிப் பொறியாளா்திலீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    காங்கயம் நகரத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக்கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த முத்துகுமார் கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னர் தற்போது வரை காங்கயம் நகராட்சிக்கு புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை.

    புதிய ஆணையராக கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் பணியாற்றி வரும் அலுவலர் ஒருவர் பொறுப்பேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக காங்கயம் பகுதியில் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக காங்கயம் நகரத்தில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சாக்கடைக்கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது சில நாட்களாக இந்தப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன.

    மேற்பார்வையிட பிரதான அலுவலர் இல்லாததால் இந்த பணிகள் எப்போது தொடர்ந்து நடைபெறும் என தெரியவில்லை.எனவே உடனடியாக  காங்கேயம் நகராட்சிக்குஆணையாளர் நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சம்பந்தப்பட்ட முன்னாள் துப்புரவு ஆய்வாளர் மூன்று நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
    காங்கயம்:

    காங்கயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்புப்பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, முன்னாள் துப்புரவு ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் முத்துக்குமார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சியில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல், கடந்த 2016 நவம்பர் 1-ந் தேதி 36 தற்காலிக கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இந்த நியமனத்தில் எந்தவித அடிப்படை விதிகள், அரசாணை பின்பற்றாமல் நியமன குறிப்பு வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, நகராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட முன்னாள் துப்புரவு ஆய்வாளர் மூன்று நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், 1973-ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரப்பணிகளின் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×